புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் ராஜினாமா ஏற்பு

புதுச்சேரி: முதலமைச்சர் நாராயணசாமியின் ராஜினாமாவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் அறிவித்ததையடுத்து, முதலமைச்சர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததில் எந்த பங்குமில்லை! - ரெங்கசாமி