முதலமைச்சர் கூட்டத்தில் காலியான இருக்கைகள் - மக்கள் பங்கேற்க விரும்பவில்லையா?
Most

கரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக உள்ள காணொலியை தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

கரூர்: தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார். பின்னர், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் விவசாயிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இரவு கலந்துகொண்டார்.

வாங்கல் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்தப் பாராட்டு விழா நேற்றிலிருந்து தமிழக மக்கள் மத்தியில் பேசு பொருளாக உள்ளது. ஏனெனில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பெருமளவிலான மக்கள் குவிந்திருப்பர் என எதிர்பார்க்கப்பட்டது.

முதலமைச்சர் கூட்டத்தில் காலியாக உள்ள இருக்கைகள்

இதனைக் கருத்தில் கொண்டு பாராட்டு விழா மிகப் பிரமாண்டமாக ஏராளமான இருக்கைகளுடன் அமைக்கப்பட்டன. ஆனால், முதலமைச்சர் விழா அரங்கிற்கு வருவதற்கு முன்பே பெரும்பாலான மக்கள் கூட்டம் கூட்டமாக கலைந்து செல்லத் தொடங்கினர். இதனால் அந்த இடம் களையிழந்து காணப்பட்ட காணொலி தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

முன்னதாக காலியாக உள்ள இருக்கைகளைப் படம் பிடித்த தனியார் நாளிதழ் செய்தியாளர் அதிமுக நிர்வாகிகளால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.